மரண அறிவித்தல்
திருமதி பேரம்பலம் கனகாம்பிகை.
தோற்றம்: 13-02-1930 மறைவு: 24-09-2021
நடுத்தெரு, காரைநகரைப் பிறப்பிடமாகவும் நீலிப்பந்தனையை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி பேரம்பலம் கனகாம்பிகை அவர்கள் கடந்த(24-09-2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், மெமோறியல் கல்லூரி, மானிப்பாய்) அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (கட்டிட ஒப்பந்த மேற்பார்வையாளர், காரைநகர்) தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பேரம்பலத்தின் (முன்னாள் புகையிரத நிலைய அதிபர், மருதானை) அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் (முன்னாள் சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும், கொழும்பு), நடராஜா (முன்னாள் அதிபர், காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்.வைத்தீஸவராக் கல்லூரி), குமாரசாமி (விவசாயப் போதனாசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்-கண்டி), கந்தசாமி (முன்னாள் மாணவன், பேராதனைப் பல்கலைக்கழகம்-கண்டி), ஞானாம்பிகை, அகிலாம்பிகை மற்றும் மகாதேவன்-கனடா (இளைப்பாறிய வருமானவரி உத்தியோகத்தர்-கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சந்திரசோதி, பரமேஸ்வரி, சரஸ்வதி, புனிதவதி, காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் திருக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் சிவநாதன், வன்னியசிங்கம், சுப்பிரமணியம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்
காலஞ்சென்ற இராசநாயகம் (இளைப்பாறிய கணக்காளர், பட்டினசபை-மன்னார்), மற்றும் செல்வநாயகம் (இளைப்பாறிய கணக்காளர், புள்ளி விபரத் திணைக்களம்-கொழும்பு), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரஞ்சோதி மற்றும் ஜெயமணி காலஞ்சென்றவர்களான திரவியநாதன், கருணாகரன் (இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர், யாழ்ற்ரன் கல்லூரி), மற்றும் சிவானந்தவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்
வாசுகி-தர்மகுலசிங்கம், சத்தியராணி-மகேஸ்வரன், கவிதா-ரகுபதி, கௌசல்யா-கணேசானந்தன், மதிவதனன்-தனேஸ்வரி, சிவதர்மினி-கோகுல்ராஜ், பகீரதி-அருண், ஜனனி-கஜேந்திரன் (பட்டதாரி உத்தியோகத்தர், சுற்றாடல் அதிகாரசபை-மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), மயூரி(மாணவி, மருத்துவ பீடம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), லோகநவநீதன்(மாணவன், கலைப்பீடம், யாழ்.பல்கலைக்கழகம்), தினேஸ்(மென் பொறியியலாளர்), துவாரகா(மருந்தாளர்), துசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்
சரண், திவ்வியா, மதுரா, பிரணவன், பவிசன், மகிசா, தனுக்சன், மதுசன், அபிக்சன், அஸ்விக்கா, அஸ்வியா, ஆதிரன், அனன்யா, ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை மு.ப.11.00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
No Responses to “மரண அறிவித்தல் – திருமதி பேரம்பலம் கனகாம்பிகை.”