2019ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் காரை.இந்தவிலிருந்து ஒன்பது மாணவர்களிற்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெற்றமை தொடர்பிலும், மேலும் ஒரு மாணவி காத்திருப்போர் பட்டியலிலிருந்து பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றிருந்தமை தொடர்பிலும் ஆக விபரமான இரு செய்திகள் இவ்விணையத்தளம் ஊடாக பிரசுரிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததேயாகும்.
தற்போது காத்திருப்போர் பட்டியலிலிருந்து மேலும் ஒரு மாணனுக்கும் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அறியத்தந்துள்ளார். B 2C என்ற பெறுபேற்றினைப் பெற்ற செல்வன் க.கஜந்தன் என்ற மாணவனே தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பிரிவில்(Information & Communication Technology) வவுனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். காரை.இந்துவிலிருந்து மொத்தமாக 11 மாணவர்கள் இதுவரை பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்த செல்வன் கஜந்தன் அவர்களையும், பயிற்றுவித்த ஆசிரிய மணிகளையும் கல்லூரிச் சமூகத்துடன் இணைந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகிறது.
No Responses to “காரை.இந்துவிலிருந்து மேலும் ஒரு மாணவனுக்கு வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.”