சிவன்கோயிலடி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்தவரும், எமது சங்கத்தின் உறுப்பினரான திருமதி உத்தரை ரவிச்சந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும, எமது கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி உமாதேவி கனகேந்திரம் அவர்கள் 20-08-2021வெள்ளிக்கிழமை அன்று சிவபதம்; அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்ப உறுப்பினர்களிற்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது மரண அறிவித்தலை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
https://ripbook.com/umathevi-kanagenthiram-612022df9a635/notice/obituary-6120236ade50a
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”