கொறோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் இருந்தவாறே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களின் முயற்சி பாராட்டிற்குரியதாகும். இவர்களின் விடுமுறையினை மேலும் பயனுள்ளதாக மாற்றுவதற்கு “நாட்டுக்கு பெறுமதியான நூலொன்று” எழுதும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கல்வி அமைச்சுடன் இணைந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தினை சென்ற யூலை மாதத்தில் முன்னெடுத்திருந்தது. மாணவர்களது படைப்பாற்றலை மேம்படுத்தி வளரும் இளம் எழுத்தாளர்களாக பரிணமிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பங்குபற்றிய செல்வி வி.கஜந்தினி, செல்வி க.தனுசியா, செல்வி க.சுஜானா ஆகிய மூன்று மாணவிகளிற்கு பாராட்டுச் சான்றிதழ்கள் கல்வி அமைச்சர், வலுசக்தி அமைச்சர் ஆகியோரின் கையொப்பத்துடன் வழங்கப்பெற்றுள்ளன.
இம்மாணவிகளையும், இவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்தி ஊக்கிவித்த தமிழ்த்துறை ஆசிரியர்களான திரு.இ.பிரதாபன், திருமதி லி.மனஸ்வினி ஆகியோரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
மாணவிகள் மூவரினதும் சான்றிதழ்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to ““நாட்டுக்கு பெறுமதியான நூலொன்று” (“A Book Worth a Country”)எழுதும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றிய காரை.இந்துவின் மாணவர்களிற்கு பாராட்டுச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.”