ஆயிலி, காரைநகரை பிறப்பிடமாகவும் கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்து தற்போது ஸ்காபுரோ, கனடாவில் வசித்து வந்தவரும் எமது சங்கத்தின் உறுப்பினருமாகிய திரு.நடராசா செந்தில்வேல் அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
திரு.செந்தில்வேல் அவர்களின் இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பரத்தில் சௌந்தராம்பிகை உடன் உறையும் சுந்தரேசப் பெருமானை பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.!”