காரைநகர் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியர் அமரர் நாகநாதர் வேலுப்பிள்ளை(ஜயம்பிள்ளை மாஸ்டர்) அவர்களின் அன்பு மகளும், கல்லூரியின் முன்னாள் நூலகர் அமரர் தேவமங்கை பாலச்சந்திரன், தாய்ச் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு.வேலுப்பிள்ளை சபாலிங்கம், எமது சங்கத்தின் உறுப்பினர் திருமதி அன்னலட்சுமி மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், எமது சங்கத்தின் உறுப்பினர் திரு.அரியரட்ணம் மனோகரன் அவர்களின் அன்புச் சிறிய தாயாரும், கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி திலகவதி அருட்பிரகாசம் அவர்கள் 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
எமது சங்கம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்பதுடன் அன்னாரது இழப்பினால் ஆழ்ந்த துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”