காரை.இந்துவில் ஏழு ஆண்டுகள் வரை இசை ஆசிரியராகப் பணியாற்றி கல்லூரியின் இசை வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தவரும், ஓய்வுநிலை சங்கீத பாடத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளரும், புகழ்பூத்த மூத்த இசைக் கலைஞருமாகிய சங்கீதபூசணம் சு.கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவிற்கு சென்ற 18-03-2021 வியாழக்கிழமை கல்லூரிச் சமூகத்தினால் அஞ்சலிக் கூட்டம் நடாத்தப்பட்டு அவரது இசைப் பணி உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இவ் அஞ்சலிக் கூட்டத்தில் அன்னாரது ஆத்மசாந்திக்காக இரு நிமிட மௌனப் பிரார்த்தனையைத் தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் அதிபரும், பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, கல்லூரியின் இசை ஆசிரியை செல்வி கலைவாணி பாலசுப்பிரமணியம் ஆகியோர் அஞ்சலியுரை நிகழ்த்தியிருந்தனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “கல்லூரியின் மறைந்த முன்னாள் இசை ஆசிரியர் சங்கீதபூசணம் கணபதிப்பிள்ளை அவர்களிற்கு கல்லூரிச் சமூகத்தினால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.”