காரை.இந்துவில் 18ஆண்டுகள் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியப் பணியாற்றி கல்லூரியின் விஞ்ஞானக் கல்வி, விளையாட்டுத்துறை ஆகியவற்றின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தவரும், ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரிய ஆலோசகருமான திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்களின் அன்பு மனைவியும், யாழ்.திருக்குடும்ப கன்னியர்மட மகா வித்தியாலயத்தின் ஓய்வுநிலை ஆசிரியையுமாகிய பங்கஜதேவி அவர்கள் 26-02-2021 அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”