மலேசியாவை பிறப்பிடமாகவும் சயம்பு வீதி, காரைநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ஸ்காபுரோ, கனடாவில் வசித்து வந்ததவரும் எமது சங்கத்தின் உறுப்பினர்களான ஓய்வுநிலை ஆசிரியை திருமதி துர்க்காலட்சுமி தர்மரத்தினம், திரு.கந்தையா நவரத்தினம்(நவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின்(Jaffna College, Undergraduate Dept.) முன்னாள் நூலகரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை நூலகருமாகிய செல்வி தேவகி கந்தையா அவர்கள் இன்று 03-02-2021 புதன்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”