.விஞ்ஞான பாட ஆசிரியராக யாழ் மத்திய கல்லூரியில் கடமையாற்றிய திருமதி அரூபா ரமேஷ் (அதிபர் சேவை தரம் – III) 04.03.2020 தொடக்கம் உதவி அதிபராக வடமாகாணத்தின் கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டு காரைநகர் இந்துக் கல்லூரியில் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். இவர் கல்விமாணி, கல்வி முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார்.
திருமதி அரூபா அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியை நகர்த்திச் செல்ல கல்லூரியின் நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்து சிறந்த முறையில் பணியாற்றுவார் என பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நம்புவதுடன் அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றது.
No Responses to “காரை.இந்துவின் உப அதிபராக பணியாற்றி வரும் திருமதி அரூபா ரமேஷ் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”