காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபரான திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் இக்கல்லூரியில் பயின்ற காலத்தில் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். 1996 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில் விஞ்ஞான ஆசிரியராகவும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றி கல்லூரியின் விஞ்ஞானக் கல்வியும், விளையாட்டுத்துறையும் மேம்பட்டு விளங்க அர்ப்பணிப்புடன் உழைத்தவர். உதை பந்தாட்டம், தடகளம் ஆகியவற்றில் பல வீரர்களின் வளர்ச்சிக்கும், உருவாக்கத்திற்கும் செயலாற்றியிருந்தது மட்டுமல்லாது போட்டியாளர்கள் தேசிய மட்டம் வரை செல்வதற்குக் காரணமாக இருந்துள்ளார்.
தரம்7இல் பயின்று கொண்டிருந்த காலத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறந்த மாணவனாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜெகதீஸ்வரன் அவர்கள் 1978இல் நடைபெற்ற பரிசில் தின நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டிருந்தார். இப்பரிசில் தின நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த ஊர்காவற்றுறை நீதிவானாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் அவர்களின் பாரியாரிடமிருந்து ஜெகதீஸ்வரன் அவர்கள் தமது திறமைக்கான பரிசிலைப் பெற்றுக் கொள்வதை 42ஆண்டுகளிற்கு முன்னர் எடுக்கப்பட்ட கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்:
No Responses to “காரை.இந்துவின் அதிபர் ஜெகதீஸ்வரன் அவர்களின் மாணவ காலத்து கல்விச் சாதனை குறித்த 43 ஆண்டுகளிற்கு முன்னைய நிழற்படப் பதிவு.”