ஆயிலி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து கள்ளித்தெரு, தங்கோடை, காரைநகர்- ரொறன்ரோ, கனடா ஆகிய இடங்களில் வசித்து தற்போது வவுனியாவில் வசித்து வந்தவரும், காசிப்பிள்ளை சக புத்திரர்கள் துரித பணமாற்றுச் சேவை நிறுவனத்தின் அதிபரும் எமது சங்கத்தின் உறுப்பினரும், அனுசரணையாளருமாகிய திரு.முருகேசு காசிப்பிள்ளை, எமது சங்கத்தின் மற்றொரு உறுப்பினர் திரு.முருகேசு சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியுமாகிய திருமதி பரமசாமி பொன்னம்மா அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”