காரைநகர் இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
காரை இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கமானது பல நெருக்கடிகள், சவால்களுக்கு மத்தியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் உலகெங்கும் பரந்து வாழ்ந்த போதிலும் கனடாவில் பழைய மாணவர் சங்கத்தை ஆரம்பித்து மனநிறைவு தரும் வகையில் பயன்தரு பணியாற்றுவது பராட்டிற்குரியது. கல்வித் திணைக்களத்தால் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறாத செயற்பாடுகளுக்கு நிதி அனுசரணை வழங்கி, கல்லூரியின் இயங்கு நிலையை நீண்டகால நோக்கில் பேணுவதற்கு கனடா பழைய மாணவர் சங்கம் உதவி வருகிறது. இதனால் நிதி அனுசரணையாளர்களை நாடிச் செல்லும் நிலைமை தவிர்க்கப்பட்டு கல்லூரியின் உயர் அந்தஸ்தை பேணும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு பொன்னம்பலம் சிவானந்தராசா அவர்களின் உறுதியான நிலைப்பாடு, ஓய்வுநிலை அதிபர் திரு S.K. சதாசிவம் அவர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாகச் செயற்பாடுகள், கனடாவிலுள்ள மூத்த பழைய மாணவர்கள், காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் மன நிறைவு காணும் பழைய மாணவர்கள், ஆகியோரின் இணைச் செயற்பாடுகளினால் கனடா பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவான பணியாற்றி நிற்கின்ற இவ் வேளையில் சம்பந்தப்பட்ட அனைவரதும் பணிகள் நினைவில் கொள்ளப்பட வேண்டியவையாகும். இச்சங்கத்தின் முன்னைய நிர்வாகங்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியினை பாராட்டி நன்றி கூறுவதுடன் நடப்பு நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பணி சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன்.
கனடா பழைய மாணவர் சங்கம் தொடர்ந்தும் காரைநகர் இந்துக் கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு பணியாற்றிட வாழ்த்துகிறேன்
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளை உருவாக்கம் பெற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தமை குறித்து கல்லூரியின் அதிபர் அரியரத்தினம் ஜெகதீஸ்வரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி”