சென்ற ஆகஸ்டு மாதம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் இணையம் ஊடாக வெளியிடப்பட்டிருந்தது. குறித்த வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து ஒன்பது மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியைப் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள், பாடத் துறைகள் ஆகியன குறித்த விபரங்கள் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அனுமதியைப் பெற்றுக்கொண்ட மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் திட்டமிட்ட முறையில் வழிப்படுத்திய முன்னாள் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.
பல்கலைக்கழக அனுமதியைக் பெற்றுள்ள மாணவர்களின் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No Responses to “காரை.இந்துவிலிருந்து ஒன்பது மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.”