இலகடி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து மேற்கு ஜேர்மனியில் வசித்து வந்தவரும் காரை.இந்துவின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக விளங்கியவருமாகிய திருமதி கலைமகள்(கலா) ஆனந்தசற்குணநாதன் அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், மைதான நிகழ்வுகளின் தேசியமட்ட சாதனையாளராக விளங்கியும் தேசியமட்ட உதை பந்தாட்ட அணியிலும் யாழ்.மாவட்ட உதை பந்தாட்ட அணியிலும் இடம்பெற்று காரை.இந்துவின் புகழை நிலைநாட்டியவரும் காரை.இந்துவின் வளர்ச்சிக்கு உதவி வருகின்றவருமாகிய திரு.சுந்தரமூர்த்தி ஆனந்தசற்குணநாதன்(ஆனந்) அவர்களின் அன்பு மனைவியும் எமது சங்கத்தின் அனுசரணையாளர்களாக விளங்கி காரை.இந்துவினுடைய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றவர்களான தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம், பொறியியலாளர் திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது சங்கம் இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”