காரைநகர் இந்துக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்ட நிகழ்வானது 23.01.2020 வியாழக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு தொடங்கி இடம்பெற்றது. ஆண்கள் பிரிவில் பங்குபற்றிய போட்டியாளர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பித்து காரைநகர் பிரதான சுற்று வீதியூடாக மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்திருந்தனர். பெண்கள் பிரிவில் பங்குபற்றிய போட்டியாளர்கள் துறைமுகம் சந்தியிலிருந்து ஆரம்பித்து கிழக்கு பிரதான வீதியூடாக பாடசாலை முன்றலை வந்தடைந்தனர். கல்லூரியின் அதிபர் திருஅரியரட்ணம் ஜெகதீஸ்வரன் அவர்கள் இப்போட்டியினை தொடக்கி வைத்தார்.
ஆண்கள், பெண்கள் பிரிவில் முதல் 5 இடங்களைப் பெற்ற போட்டியாளர்களின் விபரம் வருமாறு:
ஆண்களுக்கான வீதியோட்டம்
1 ம் இடம் – செல்வன் கு. கஜேந்திரகுமார்
2 ம் இடம் – செல்வன் சு. சுதர்சன்
3 ம் இடம் – செல்வன் ந. குகப்பிரியந்தன்
4 ம் இடம் – செல்வன் கி. ஜனிஸ்டன்
5 ம் இடம் – செல்வன் ஆ. ஐங்கரன்
பெண்களுக்கான வீதியோட்டம்
1 ம் இடம் – செல்வி சு. ஸரண்யா
2 ம் இடம் – செல்வி ச. சஞ்சிகா
3 ம் இடம் – செல்வி ப. விஜிதா
4 ம் இடம் – செல்வி ச. அசந்தா
5 ம் இடம் – செல்வி சி. லுயானா
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினரும் கல்லூரியின் விளையாட்டுத்துறைச் சாதனையாளருமாகிய அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவாக வீதியோட்ட நிகழ்வின் ஆண்கள் பிரிவின் 1வது வெற்றியாளருக்கும் பெண்கள் பிரிவின் 1வது வெற்றியாளருக்கும் சுற்றுக்கேடயமும் ரொக்கப்பரிசிலும் வழங்கும் திட்டம் இரு ஆண்டுகளிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதிபர் திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரன், பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் ஆகியோருடன்; வெற்றியாளர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், வீதியோட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் நினைவுச் சுற்றுக்கேடயத்தினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற வீதியோட்டம்.”