எமது சங்கத்தின் உறுப்பினர்களான திரு.சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன்(ரவி), திரு.சுப்பிரமணியம் ஞானேஸ்வரன்(ஸ்ரீ) ஆகியோரின் அன்புத் தாயாரும், சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திருமதி பிரபா ரவிச்சந்திரன், தாய்ச் சங்கத்தின் பொருளாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலன் ஆகியோரின் பெரிய தாயாரும் சடையாளி, காரைநகர், ரொறன்ரோ, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகக் கொண்டிருந்து தற்போது சடையாளியில் வசித்து வந்தவரும் எமது கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி தனலட்சுமி அம்பாள் சுப்பிரமணியம் 20-01-2020 திங்கட்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”