கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களின் முன்னாள் ஆங்கிலத்துறை விரிவுரையாளரும, மடவளவு, எத்தியோப்பியா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் இன, மொழி உணர்வாளரும், ஊர்ப் பற்றாளரும், காரை.இந்து அன்னையின் புதல்வனுமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம்; அவர்களின் 2வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் 10-01-2020 வெள்ளிக்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அமரர் கென்னடியின் ஆத்ம சாந்திக்கான மௌனப் பிரார்த்தனை, அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தமை, மலரஞ்சலி செய்தமை ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் திரு.வி.கேதீஸ்வரதாசன் தலைமையில் நினைவு அஞ்சலிக் கூட்டம் தொடங்கியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியை (இந்து நாகரீகத் துறை) திருமதி நாச்சியார் செல்வநாயகம், காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவருமாகிய சட்டத்தரணி மணிவண்ணன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ், திருமதி சூரியா சிவரூபன், திரு.நடராசா சண்மகலிங்கம்(ஜேர்மனி), ‘எனது ஊர் காரைநகர்’ திரு.தீசன் திரவியநாதன், திரு.கபிலன் சிவஞானம், திரு.சிதம்பரப்பிள்ளை கெங்காதரன் உள்ளிட்ட பலரும் நினைவுரைகள் ஆற்றியிருந்தனர்.
வாழ்வாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த உயர்தர வகுப்பில் பயிலும் காரைநகர்ப் பாடசாலைகளைச் சேர்ந்த திறமை மிக்க இருபது மாணவர்களிற்கு கல்வி ஊக்குவிப்பு நிதி கென்னடியின் குடும்பத்தினரால் இந்நிகழ்வின்போது வழங்கப்பட்டது. உயர்தர வகுப்பு மாணவர்களிற்கான இந்த கல்வி ஊக்குவிப்பு நிதித் திட்டத்தினை கென்னடி அவர்களே தொடக்கிவைத்து உதவிகளை வழங்கி வந்திருந்தார் என்பதுடன் அவரது மறைவை அடுத்து அன்னாரது குடும்பத்தினர் இத்திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள நாற்பது பேருக்கு வாழ்வாதார நிதியும் கென்னடியின் நினைவாக அன்னாரது குடும்பத்தினரால் இந்நிகழ்வில்வைத்து உதவப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் 2வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில் அன்னாரது பணிகள் நினைவுகூரப்பட்டன.”