கல்வி அமைச்சினால் சிறந்த அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டு ‘குருபிரதீபா பிரபா’ விருதினைப் பெற்றுக்கொண்டு தாம் கற்ற பாடசாலைக்கு பெருமை சேர்த்த யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டு விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. காரை.இந்துவின் பழைய மாணவியான திருமதி வாசுகி தவபாலன் இக்கல்லூரியின் அதிபராக மூன்று ஆண்டுகள் பதவி வகித்து கல்லூரியை வளர்ச்சியை நோக்கி நகர்த்திச் சென்றதில் பாராட்டும் படியாக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தவர். அதேவேளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் யாப்பு விதிக்கு அமைவாக அச்சங்கத்தின் பதவி வழித் தலைவராகவும் (Ex Officio President) தாம் சேவையிலிருந்த மூன்று ஆண்டுகளுக்கும் பதவி வகித்தவர்.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளர் திரு.கனக சிவகுமாரன் அவர்களும் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் இணைந்து பாராட்டு விருதினை திருமதி வாசுகி தவபாலன் அவர்களிடம் அண்மையில் கையளித்திருந்தனர்.
தொடர்புபட்ட செய்தியினையும் வழங்கப்பட்ட பாராட்டு விருதினையும் கீழே பார்வையிடலாம்:
No Responses to “சிறந்த அதிபராகத் தெரிவுசெய்யப்பட்ட திருமதி வாசுகி தவபாலனுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டு விருது வழங்கி கௌரவித்துள்ளது.”