காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தின விழா சென்ற 10-09-2019 புதன்கிழமை உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டிலும் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் வழிப்படுத்தலிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் ப.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர். திரு.கா.குமாரவேலு அவர்கள் பிரதம விருந்தினராகவும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும்; கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர். அத்துடன் பழைய மாணவரும், பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவரும், ஓய்வுநிலை அதிபருமான கலாபூஷணம் பண்டிதர் மு.சு வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றி நிகழ்வினைச் சிறப்பித்திருந்தார்.
அறிவு என்னும் ஞான ஒளியை மாணவர்களுக்கு ஊட்டும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன் மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதியபோசன விருந்திலும், விருந்தினர்களுடன் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு அக மகிழ்ந்திருந்தனர். இந் நிகழ்விற்கு முழுமையான அனுசரணை வழங்கிய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கு கல்லூரியின் சார்பில் அதிபர் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்துவில் வெகு சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா.”