காரை. இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினரான திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்களின் சிறிய தாயாரும், கல்லூரியின் பழைய மாணவன் அமரர் அம்பலவாணர் தம்பிஐயா(தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், கல்லூரியின் பழைய மாணவி சத்தியபாமாவின்(கனடா) அன்புத் தாயாரும், கல்லூரியின் பழைய மாணவியும், சயம்பு வீதி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கொழும்பில் வாழ்ந்து வந்தவருமான திருமதி ராசலோகினி தம்பிஐயா இன்று 07-10-2019 திங்கட்கிழமை கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நிர்வாகம், காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”