தகவல் தொழில்நுட்ப ஊடகத்துறை அமைச்சின் கீழ் வருகின்ற இலங்கை பத்திரிகைப் பேரவை உறுப்பினராக மூத்த ஊடகவியலாளரான திரு.தேவதாசன் செந்தில்வேலவர் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபரான அமரர் S.R.S.தேவதாசன் அவர்களின் இளைய புதல்வனும், கல்லூரியின் பழைய மாணவனுமாகிய திரு.செந்தில்வேலவர் அவர்கள் உயரிய இப்பதவிக்கு நியமனம் பெற்றுள்ளமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிக்க பெருமிதம் கொள்வதுடன் காரை.இந்துவிற்கு புகழ்சேர்த்த இவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
‘தினகரன்’, ‘தினகரன் வாரமஞ்சரி’, ‘வண்ண வானவில்’ ஆகிய பத்திரிகைகளை வெளியிடுகின்ற லேக் ஹவுஸ் நிறுவனத்தில் மூத்த ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திரு.செந்தில்வேலவர் 30ஆண்டுகால ஊடகப் பணியில் ஈடுபட்ட அனுபவத்தைக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது நியமனம் குறித்து பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தியினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “இலங்கை பத்திரிகைப் பேரவை உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள காரை.இந்துவின் பழைய மாணவன் செந்தில்வேலவரை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”