காரைநகர் மணிவாசகர் சபையினர் காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கிடையே சைவநெறித் தேர்வு, பேச்சு, பண்ணிசை, கதைகூறல் ஆகிய போட்டிகளை மாணவர்களின் சமய அறிவையும், சைவப் பாரம்பரியத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.
அந்தவகையில் இவ்வாண்டு நடத்தப்பட்ட போட்டிகளில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் தங்கப் பதக்கத்தையும், எட்டு மாணவர்கள் முதலிடத்தையும் பெற்றிருக்கின்றனர்.
தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்கள்
செல்வி.தே.கம்சிகா தரம் 9 சைவநெறித் தேர்வு
செல்வி.க.அபிராமி தரம் 11 சைவநெறித் தேர்வு
முதலிடம் பெற்ற மாணவர்கள்
இல. | பெயர் | போட்டி | நிலை |
1. | சி.புருசோத்தமி | பண்ணிசை | 1ஆம் இடம் |
2. | ஆ.அமிர்தா | பண்ணிசை | 1ஆம் இடம் |
3. | பா.குலமதி | பேச்சு | 1ஆம் இடம் |
4. | க.வினோதன் | பேச்சு | 1ஆம் இடம் |
5. | பா.சிவாஜினி | சைவநெறித் தேர்வு தரம் 8 | 1ஆம் இடம் |
6. | தே.கம்சிகா | சைவநெறித் தேர்வு தரம் 9 | 1ஆம் இடம் |
7. | பா.குலமதி | சைவநெறித் தேர்வு தரம் 10 | 1ஆம் இடம் |
8. | க.அபிராமி | சைவநெறித் தேர்வு தரம் 11 | 1ஆம் இடம் |
மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியமணிகளுக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றது.
No Responses to “காரைநகர் மணிவாசகர் சபை நடத்திய சைவநெறித் தேர்வு மற்றும் அறநெறிப் போட்டிகளில் இரு மாணவர்கள் தங்கப்பதக்கம்! எட்டு மாணவர்கள் முதலிடம்!”