கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) St. John’s Ambulance அணி அமைப்பதற்கான தொடக்க நிகழ்வுகள் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் புதன்கிழமை (03.12.2014) அன்று நடைபெற்றது.
St. John’s Ambulance அமைப்பின் யாழ் மாவட்ட ஆணையாளர் திரு.S.செல்வரஞ்சன் அவர்களும் மாவட்ட உதவி ஆணையாளர் திரு.ஈழநேசன் அவர்களும் மாணவர்களுக்கான தொடக்கநிலைப் பயிற்சிகளை வழங்கனர். தரம் 6 முதல் உயர்தரம் வரையான வகுப்புகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் ஆர்வத்துடன் இப்பயிற்சியினைப் பெற்றனர்.
கல்லூரியின் St. John’s Ambulance அணிக்கு பொறுப்பாசிரியர்களாக திரு.P. செந்தில்குமார், திருமதி.T.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பாகச் சேவையாற்றுகின்றனர்.
No Responses to “கல்லூரியில் St. John’s Ambulance அணி அமைக்கப்பட்டுள்ளது”