தகவல் தொழில்நுட்ப உலகில் யாழ் மண்ணை ஒரு அடையாளமாக மாற்றும் பாதையில்Yarl IT Hub இனால் நடத்தப்பட்டுவரும் Yarl Geek Challenge Competition மூன்றாவது ஆண்டாக கடந்த ஒக்டோபர் 31, நவ 1, 2 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்து வரும் இளம் தயாரிப்பாளர்களை முதலீட்டாளர்களுடன் இணைப்பதற்கான வாய்ப்பாக இப்போட்டிகள் Yarl IT Hub இனால் அமைக்கப்பட்டிருந்தன.
இப்போட்டிகளுக்கான ஆலோசனைப் பங்காளராக Lanka Angel Network நிறுவனமும் நிதிப்பங்காளராக ஆழிக்குமரன் ஆனந்தனின் மகனானா ரஜன் ஆனந்தனின் Blue Ocean Ventures நிறுவனமும் ஆதரவு வழங்கியிருந்தன.
இப்போட்டிகள் இளநிலைப்பிரிவு(Junior), முதுநிலைப்பிரிவு(Senior) என இரு பிரிவுகளாக நடைபெற்றிருந்தன.
கடந்த ஆண்டு யாழ் என்று மட்டுப்படுத்தப்பட்டிருந்த Yarl Geek Challenge போட்டிகள் இவ்வாண்டு முதுநிலைப் பிரிவில் நாட்டின் பலபாகங்களிலும் உள்ள பல்கலைக்கழக அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய இளநிலைப் பிரிவினருக்கான
அணியினர் தமது தயாரிப்புகளை Mobile Apps, Web, Open Hardware எனும் வகைகளில் வடிவமைத்திருந்தனர்.
வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் காரணிகளாக போட்டிக்கான தயாரிப்புகளின் புதுமை, குறைந்த வளம், பிரதியாக்கம் இன்மை, பயன்படுதன்மை, தொழில்நுட்ப ரீதியிலும் வணிகரீதியிலும் உறுதித்தன்மை ஆகியன அமைந்திருந்தன.
இந்தவகையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்ப, கலைத்துறையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களைக் கொண்ட மூன்று அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிக் கொண்டனர்.
இளநிலைப்பிரிவில்(Junior) சிறந்த Hardware Application தயாரிப்பாக எமது கல்லூரி உயர்தர வகுப்பின் தொழில்நுட்பத்துறை மாணவர்களின் அணி ‘Letter Detector Device’ என்ற தயாரிப்பிற்காக மிகச்சிறந்த தயாரிப்பிற்கான வெற்றிப் பதக்கத்தினைத் தமதாக்கிக் கொண்டனர்.
இவ்வணியினருக்கான பரிசினை Lanka Angel Network நிறுவன முதல்வர் திரு. எரிக் அவர்கள் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வி.எஸ்.லித்தியா, செல்வன்.எஸ்.சுதர்சன், செல்வன்.எஸ்.விஜயதர்சன் ஆகியோரையும் படத்தில் காணலாம்.
இளநிலைப் பிரிவில் இறுதி வெற்றியாளராக யாழ் இந்து அணியும், சிறந்த Web Application வடிவமைப்புக்காக வேம்படி மகளிர் கல்லூரி அணியும், சிறந்த Mobile Application வடிவமைப்புக்காக வேம்படி மகளிர் கல்லூரி அணியும் வெற்றிப்பதக்கம் பெற்ற அதேவேளையில் எமது கல்லூரி அணி Hardware Application க்கான வெற்றிப்பதக்கத்தைப் பெற்று யாழ் மாவட்ட முன்னணிப்பாடசாலைகளுக்கு இணையான சாதனையைத் தகவல் தொழில்நுட்பத்துறையில் பதிவாக்கியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறந்த Web Application வடிவமைப்பிற்காக எமது கல்லூரியின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த கே.டிலானி, ரி.றோமிலா, எஸ்.பிரசாலினி ஆகியோரின் அணியும், கலைத்துறையைச் சேர்ந்த பி.சஜிதா, என்.டினோஜா, ஏ.துஷியந்தினி ஆகியோரின் அணியும் சிறப்புப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டன.
எமது கல்லூரியின் உயர்தர வகுப்பில் புதிய தொழில்நுட்ப பாடத்துறை இவ்வாண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Yarl Geek Challenge-Season 3 போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றி யாழ் மாவட்ட முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றிப் பதக்கங்ளைப் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் பயிற்றுவித்த தகவல் தொழில்நுட்பத்துறை ஆசிரிய மணிகளான திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன் மற்றும் திருமதி. பத்மினி சசிதரன் ஆகியோரையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்துவதுடன் தமது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
மேற்படி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் மாணவர்களைப் போட்டிக்குத் தயார்படுத்திய ஆசிரியைகளான திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன் மற்றும் திருமதி. பத்மினி சசிதரன் ஆகியோரும் கல்லூரி நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து வழங்குவதனையும் படத்தில் காணலாம்.
No Responses to “Yarl Geek Challenge-Season 3 போட்டியில் யாழ் முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றியை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் தட்டிக் கொண்டது”