கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் முன்னாள் தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய திரு.குமாரவேலு இராசையா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து தாய்ச் சங்க நிர்வாகம் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளது.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் இக்கல்லூரியின் ஓர் அலகாக இருந்து வந்த சுப்பிரமணிய வித்தியாசாலையில் தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்டவர்.
இந்தியாவில் பட்டப் படிப்பினை முடித்துக்கொண்ட பட்டதாரியான இவர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி ஆகியவற்றில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் கண்டி மாவட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பின்னர் கல்வி அமைச்சில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்வி அதிகாரியாகவும பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்டு; பணியாற்றி கல்விசச் சமூகத்தின் பாராட்டிற்குரியவராக விளங்கியவர்.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை தலைவராக பணியாற்றிய காலத்தில் பாடசாலை வளர்ச்சிப் பணிகளில மிகுந்த அக்கறையுடன் செயலாற்றியிருந்தவர். சுப்பிரமணிய வித்தியாசாலையில் தற்போது பாவனையிலுள்ள புதிய கட்டிடத் தொகுதி இவரது பெரு முயற்சியினாலேயே நிறைவுசெய்யப்பட்டதாகும்.
தாம் கற்ற பாடசாலைகளிற்கும் கல்விச் சமூகத்திற்கும் திரு.இராசையா ஆற்றிய சேவை அளப்பரியதாகும் என்பதுடன் இவரது இழப்பானது கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்கும் கல்விச் சமூகத்திற்கும் பேரிழபப்பாகும்.
அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உறவினர் ஆகியோருக்கு தாய்ச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்தச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசப் பெருமானை இறைஞ்சுகின்றேன்.
திரு.எஸ்.கே.சதாசிவம்
போசகர்
பழைய மாணவர் சங்க தாய்ச்சங்கம்
கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் முன்னாள் தலைவர் திரு.குமாரவேலு இராசையா அவர்களின் மறைவு குறித்து தாய்ச் சங்கப் போசகர் திரு.எஸ்.கே. சதாசிவம் அவர்களின் அனுதாபச் செய்தி”