கலாநிதிஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த ஆங்கில தின நிகழ்வுகள் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பாடசாலையின் ஆங்கில மன்றத்தின் தலைவர் செல்வி நவநிதி தலைமையில் வியாழக்கிழமை (18.09.2014) அன்று அழகாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரும் எத்தியோப்பியா பல்கலைக்கழக இணைப் பேராசிரியருமான கலாநிதி.ஜோன் மனோகரன் கென்னடி விஜயரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக கல்வி வலய ஆங்கில மொழித்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கே.கதிரேசபிள்ளை அவர்களும் கௌரவ விருந்தினராக பழைய மாணவரும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியரும் ஆகிய திரு.ஆறுமுகம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
பாடசாலையின் ஆங்கில மொழித்துறை ஆசிரியர்கள் ஆங்கிலதின நிகழ்வுகளுக்காக மாணவர்களைத் தயார்படுத்தி நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தனர். ஆங்கிலமொழியிலான கதை கூறுதல், விளம்பர நேரம், தனி நடிப்பு, பேச்சு, செய்தி வாசிப்பு, திரை விமர்சனம் போன்ற மாணவர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவரும்வகையில் தயாரித்து வழங்கப்பட்டிருந்தன.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழேகாணலாம்.
No Responses to “அழகாக நடைபெற்ற ஆங்கில தின நிகழ்வுகள்”