வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலயத்தில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அதிபராகப் பணியாற்றி பாடசாலையை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு அயராது உழைத்த செல்வி விமலாதேவி விசுவனாதன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெறுவதற்கு பாடசாலைச் சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-07-2019 வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் பதில் அதிபர் திருமதி ப.உமாதேவி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள சேவைநலன் பாராட்டு விழாவில் காரைநகரைச் சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் உள்ளிட்ட பல கல்வியாளர்கள் கலந்துகொண்டு செல்வி விமலாதேவி விசுவனாதனின் அளப்பரிய கல்விச் சேவையைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும், கல்லூரியில் 13ஆண்டுகளுக்கு மேலாக கணிதபாடத்தைக் கற்பித்து அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியர் என்ற பெயரைப் பெற்று விளங்குகின்றவருமாகிய செல்வி விமலாதேவியின் இப்பாராட்டு விழாவில் காரை.இந்துவின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளார்.
சேவைநலன் பாராட்டு விழாவின் அழைப்பிதழை கீழே பார்வையிடலாம்:
No Responses to “வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற செல்வி விமலாதேவி விசுவனாதன் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா.”