காரை.இந்துவின் பழைய மாணவனும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வுநிலை விளையாட்டுத்துறை ஆசிரியரும், காரை.இந்துவின் விளையாட்டுத்துறை சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் முக்கியபங்கு கொண்டு உதவி வந்தது மட்டுமல்லாது கல்லூரியின் விளையாட்டுப் பிரிவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து தமது விளையாட்டுத்துறை ஆற்றலையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டு கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் பெரும் பங்களித்திருந்ததுடன் காரை.மண்ணின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் உழைத்துவந்தவருமாகிய திரு.அம்பலவாணர் தியாகராஜா அவர்கள் இன்று 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ, கனடாவில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எமது சங்கம் இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
யா/காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”