காரை.இந்தவின் பழைய மாணவியும், கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியையுமாகிய செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்கள் கால்நூற்றாண்டு கால ஆசிரிய சேவையிலிருந்து ;ஓய்வுபெற்றுள்ளார். காரைநகர் இந்துக் கல்லூரியில் பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியப் பணியாற்றிய விமலாதேவி அவர்கள் ஓய்வுபெறுவதற்கு முன்பாகவுள்ள ஏழு ஆண்டுகளுக்கு வலந்தலை வடக்கு அ.மி.த.க. வித்தியாலயத்தின்(சடையாளிப் பள்ளிக்கூடம்) அதிபராக பணியாற்றியிருந்தவர். மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி மாணவர்களின் மனம் கவர்ந்த சிறந்த ஆசிரியை என்ற பெயர்பெற்றிருந்த இவர் ஆளுமையும், கடமை உணர்வும், நிர்வாகத் திறனும் மிக்க அதிபர் என்பதையும் நிரூபித்து கல்வித் திணைக்கள அதிகாரிகள் மட்டத்திலும், தாம் கடமையாற்றிய பாடசாலைகளின் சமூகத்தின் மத்தியிலும் காரைநகர் மக்கள் மத்தியிலும நன்மதிப்பும், நற்பெயரும் பெற்று விளங்கியவர்.
தான் கற்ற பாடசாலையான காரை.இந்துவின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு செயலாற்றிய இவர் கல்லூரியின் அபிவிருத்திச் சபை உறுப்பினராகவும், பழைய மாணவர் சங்க நிர்வாக சபை உறுப்பினராகவும் பதவி வகித்து கல்லூரியின் வளர்ச்சியை முன்னெடுத்ததில் செல்வி விமலாதேவியின் காத்திரமான பங்களிப்பு போற்றுதற்குரியதாகும். இவரது தந்தையாரான விசுவநாதன் அவர்கள்(காசிப்பிள்ளை உபாத்தியாயர்) ஆரம்ப பாடசாலை ஆசிரயராக பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதன்மூலம் காரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்டு பிரபல்யம் பெற்று விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த அளப்பரிய கல்விப் பணியினைப் பாராட்டுகின்ற காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரது ஓய்வுகாலம் சிறப்புற்று மகிழ்ச்சிகரமானதாக அமைந்து விளங்க தனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது 60வது பிறந்தநாள் நல் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்வதில் பேருவகையடைகின்றது.
வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய சமூகத்தின் சார்பில் செல்வி விமலாதேவியின் கல்விச் சேவையைப் பாராட்டியும் அவரை வாழ்த்தியும் வெளியிடப்பட்டிருந்த அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No Responses to “வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய அதிபர் விமலாதேவி விசுவநாதன் அவர்கள் ஓய்வுபெற்றமையை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரைப் பாராட்டி வாழ்த்துகின்றது”