காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் நிதிசேர் நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ‘இன்னிசை முழக்கம்’ இசை நிகழ்வினை வழங்கி ரசிகர்களின் அமோக ஆதரவினைப் பெற்று அனைவர் மனங்களிலும் இடம்பிடித்த பின்னணிப் பாடகரான ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரண் இன்று வெள்ளிக்கிழமை ரொறன்ரோ விமானநிலையத்திலிருந்து தமிழ்நாடு, சென்னை திரும்பினார். இவரை பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.
தான் கனடாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் வழங்கியிருந்த ஆதரவிற்கும் அன்பான உபசரணைக்கும் நன்றி தெரிவித்ததுடன் கனடா வாழ் தமிழ் மக்களின் இசை ஈடுபாட்டினையும், ரசிப்புத் தன்மையையும் வியந்து பாராட்டினார். இம்முறை கனடாவிற்கான தனது பயணம் மனதில் பதிந்துவிட்ட மறக்கமுடியாத பயணம் எனவும் கனடாவில் கர்நாடக இசைக் கச்சேரி நிகழ்த்தவேண்டும் என்கின்ற தனது விருப்பத்தினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினர் நிறைவேற்றி வைத்தமை குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுச் சென்றார்.
விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “அற்புதமான இசை நிகழ்வை வழங்கி இசை ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரண் சென்னை திரும்பினார்!”