கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் 25 ஆண்டுகள் ஆசிரியப்பணியாற்றியவரும் கல்லூரிப் பண்ணை இயற்றியதுடன் அதற்கான இசையையும் அமைத்தவரான அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் நினைவாக கல்லூரியின் அதிசிறந்த மாணவனுக்கான சிறப்புப் பரிசிலை வழங்கி ஊக்கிவிக்க ஐயாயிரம் ரூபாவினை அன்னாரது மகன் திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் வழங்கி உதவி உள்ளார்.
அமரர். நாகமுத்து கனகசுந்தரம் ஆசிரியர் காரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்ட காரைநகர் நடுத்தெருவைச் சோந்த நாகமுத்து புலவரின் ஒரே மகன் என்பதுடன் கல்லூரியில் (1948-1970) காலப்பகுதியில் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களைக் கற்பித்தவர். இசைப்பிரியரான இவர் புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞராவார்.
இச்சிறப்புப் பரிசு நேற்று வெள்ளிக்கிழமை (04.07.2014) அன்று கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் அதிசிறந்த மாணவருக்கு வழங்கிக் கௌரவித்து ஊக்குவிக்கப்பட்டது.
No Responses to “அமரர் நாகமுத்து கனகசுந்தரம் நினைவு சிறப்புப் பரிசில் கல்லூரியின் அதிசிறந்த மாணவனுக்கு வழங்குவதற்கு ஐயாயிரம் ரூபா உதவி”