யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விஞ்ஞான பீடத் தலைவரும், இப்பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் எமது கல்லூரியின் மேம்பாட்டில் இன்றுவரை அக்கறையுடன் பணியாற்றி வருகின்றவரும் கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவனுமாகிய பேராசிரியர் கலாநிதி வே.தர்மரட்ணம் அவர்களின் துணைவியார் கனகேஸ்வரி; அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை காரைநகரில்(சம்பந்தர்கண்டி) சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாருக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துவதுடன் அன்னாரது துணைவர் கலாநிதி வே.தர்மரட்ணம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
யா/காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”