கல்லூரியின் பெண்கள் சாரணிய பிரிவிற்கு புதிய மாணவிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு அண்மையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.
சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்வதுடன் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக் களமாக பாடசாலைகளில் மாணவ மாணவியருக்கான சாரணிய இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் கடந்த ஆண்டில் தொடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்கள் சாரணிய பிரிவிற்கே இவ்வாண்டு மேலும் புதிய மாணவிகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இந்நிகழ்வில், பெண்கள் சாரணிய அமைப்பின் வடமாகாண ஆணையாளர் திருமதி.;ரூபா வசந்தகுமார் கலந்து கொண்டு அமைப்பின் விதிகளுக்கு அமைவாக பின்பற்றப்படும் நடைமுறைச் செயற்பாடுகளை முன்னின்று நடத்தி கல்லூரியின் பெண்கள் சாரணிய அமைப்பிற்கு புதிய பிரிவினைத் தொடக்கி வைத்தார்.
பொறுப்பாசிரியைகளாக பெண்கள் சாரணியத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற கல்லூரியின் ஆசிரியையான செல்வி சின்னையா சித்திரூபா மற்றும் திருமதி.அ.முகுந்தன் ஆகியோர் சிறப்பான முறையில் கல்லுரியின் பெண்கள் சாரணிய பிரிவினை நெறிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “கல்லூரியின் பெண்கள் சாரணிய பிரிவிற்கு புதிய மாணவிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் வடமாகாண ஆணையாளர் திருமதி.ரூபா வசந்தகுமார்”