காரைநகர் ஈழத்துச் சிதம்பர மாணிக்க வாசகர் மடாலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மனோன்மனி அம்பாள் மண்டபத் திறப்பு விழா டிசம்பர் முதலாம் திகதி (01-12-2013) ஞாயிற்றுக்கிழமை கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
மாணிக்கவாசகர் மடாலயத் தலைவர் லயன் E.S.P.நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில் ஆசியுரைகள் சிறப்புப் பேருரைகள், மாணவர்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் காரைநகர் மணிவாசகர் மடாலயத்திற்கு புதிய அன்னதான மன்டபத்தை அமைத்துதவிய பெருமதிப்பிற்குரிய கொடையாளரும் எமது பாடசாலை பழைய மாணவருமான திரு.சண்முகம் சிவஞானம் அவர்களின் பணிநயந்து ‘அறக்கொடைச்செம்மல்’ விருது வழங்கி மேற்படி சபையினரால் கௌரவிக்கப்பட்டார்.
மாணவிகளின் வரவேற்பு நடனம், மற்றும் வரவேற்பு நடனம் வழங்கிய மாணவிகள் எமது அதிபருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் திரு திருமதி சண்முகம் சிவஞானம் ஆகியோர் கௌரவிக்கப்படுவதனையும் படங்களில் காணலாம்.
No Responses to “மனோன்மனி அம்பாள் மண்டபத் திறப்பு விழா எமது கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் தொடங்கியது”