காரைநகர் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்து விட்ட அமரர் தம்பிராசா மாஸ்டரின் பணிகள் பலராலும் உணர்பூர்வமாக நினைவு கூரப்பட்டு பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கலாநிதி ஆ. தியாகராசா ம.ம. வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆரம்பகாத்தாவாகவும் தலைவராகவும் பணியாற்றியவரும் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும் கனடாவிலும் தாயகத்திலும் சமய சமூகப் பணிகளில் ஈடபட்டு வந்தவருமாகிய அமரத்துவமடைந்த தம்பிராசா மாஸ்டரின் பூதவுடல் ரொரன்ரோ, கனடாவில் ஒக்டன் மலர் சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபேது பெருந்திரளான காரைநகர் மக்களும் கனடாவிலுள்ள பல சமய சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர். நேரில் சமூகமளிக்க முடியாத அமைப்புக்களும் தனிப்பட்டோரும் இரங்கற் செய்திகளை அனுப்பிவைத்திருந்தனர்.
பழைய மாணவர் சங்கத்தின் தாய்ச் சங்க நிர்வாகம, யாழ்ற்ரன் கல்லூரி சமூகம், கனடா–காரை கலாச்சார மன்றம், பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம், சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை போன்ற ஊர் சார்ந்த அமைப்புக்களும் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை, ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை, கனடா பெரிய சிவன் ஆலய நிர்வாகம், வாட்டலூ- கொல்வ் வட்டார தமிழ் பண்பாட்டு பாடசாலை ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேரில் சமூகமளித்தும்; கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம் வெளியிட்டும் மலர் வளையம் சாத்தியும் இரங்கற் செய்திகள் அனுப்பிவைத்தும் இரங்கலுரை நிகழ்த்தியும் அமரருக்கான இறுதி அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
அன்னாரது மைத்துனரும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவருமாகிய திரு.சிவா மகேசன், லண்டன் சுடரொளி ஆசிரியர் திரு.ஜ.தி.சம்பந்தன், அன்னாருடன் காரை இந்துவில் பணியாற்றிய ஆசிரியை திருமதி புலவர் பூரணம் ஏனாதிநாதன் ஆகியோர் இரங்கற்செய்திகள் அனுப்பியோருள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
சென்ற சனிக்கிழமை(27-07-2013) அன்று நடைபெற்ற அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வில் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் அதன் போசகரான திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களின் தலைமையில் அன்னாரின் பணிகள் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளால்; உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டிருந்தன.
கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம், மக்மாஸ்டர் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் கலாநிதி தி.சிவகுமாரன், கனடா பெரிய சிவன் ஆலய ஆதீனகர்த்தா அடிகளார் அவர்கள், கனடா–காரை கலாச்சாரமன்ற தலைவர் திரு.தம்பிஜயா பரமானந்தராசா, செயலாளர் திரு.மார்க்கண்டு செந்தில்நாதன், உப-தலைவர் திரு.சங்கரப்பிள்ளை தவராசா, போசகர் திரு.சிவசுப்பிரமணியம் குகநேசபவான், முன்னாள் ஆசிரியர் திரு.சங்கரப்பிள்ளை அப்பாப்பிள்ளை, பழைய மாணவர் சங்க கனடா கிளையின் செயலாளர் கனக.சிவகுமாரன், உப-பொருளாளர் திரு.ந.பிரகலாதீஸ்வரன, கிளை சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரும் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் செயலாளருமாகிய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் ஆகியோரினால் அமரர் தம்பிராசா மாஸ்டரது ஆசிரியப்பணி, சமயப்பணி, ஊர்ப்பணி தான் கற்ற கல்லூரியின் மேம்பாட்டிற்கான பணி என அன்னாரது சமய சமூகப்பணிகள் நினைவுகூரப்பட்டிருந்தன.
அன்னாரது பேரப்பிள்ளைகள் அன்னார் தமக்கு அறிவினை ஊட்டி சமய பண்பாட்டு ஒழுக்கங்களை பின்பற்ற ஊக்குவித்ததுடன் பாசத்தோடு அரவணைத்து மகிழ்ந்த காலங்களை நினைவுகூர்ந்து தமது உணர்வுகளை உரைகள் மூலமாக வெளிப்படுத்தியது அனைவர் நெஞ்சையும் நெகிழ வைப்பதாக இருந்தது.
அமரர் தம்பிராசா மாஸ்டரின் புதல்வன, கலாநிதி.தம்பிராசா ரவிச்சந்திரன் அவர்கள் இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
No Responses to “காரைநகர் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்து விட்ட அமரர் தம்பிராசா மாஸ்டரின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி”