கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ஆதரவில் ஜுன் 23,2013 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியா, வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ஆதரவில் நடத்தப்பட்ட இவ்விழா பாடசாலையின் சாதனைகளை நினைவுகூருதல், பாடசாலைக்கு 1மில்லியன் (10 லட்சம்) ரூபாய்களை நிரந்தர வைப்பில் இட்டு இதில் இருந்து கிடைக்கும் மாதாந்த வருமானத்தின் (Interest) உதவியுடன் கல்வித் திணைக்களத்தினால் கிடைக்கப் பெறாத சேவைகளான புறப்பாட தேவைகளை ((Extra Curriculam Activities) ஓரளவேனும் பூர்த்தி செய்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
விழா மாலை 06:15 மணியளவில் சங்கத் தலைவர் பரமநாதர் தவராஜா தலைமையில் ஆரம்பமானது. ஆதிசங்கர் தயானந்தா, பிரவீனா ரமேஷ் தொகுத்து வழங்க, பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்த ஓய்வு பெற்ற ஆசிரியை புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன், மற்றும் கல்லூரியின் ஸ்தாபகர் பெரியார் முத்து சயம்பு ஐயா அவர்களின் பூட்டன் பூட்டி திரு, திருமதி G .ரமேஷ் , மேலும் கல்லூரியை மூன்று சகாப்தங்களுக்கு மேல் திறம்பட ஆத்மார்த்தமாக வழிநடத்திய கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் புதல்வியும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் பிதாமகன் கலாநிதி சாபதி சபாரட்ணம் அவர்களின் மனைவியுமான திருமதி மங்கை சபாரட்ணம் அவர்களும் மங்கள விளக்கேற்ற , சைவமணி,சித்தாந்த செம்மல், செஞ்சொல் வாரதி , வித்துவான் மு.சபாரட்ணம் அவர்களின் புதல்வன் பாலகிரிஷ்ணன் சபாரட்ணம் அவர்கள் தேவாரம் பாடி விழாவினை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தனர்.
மேற்படி விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்கத்தின் தலைவருமாகியதிரு.அ.செல்வச்சந்திரன்(நேரு மாஸ்ரர்), பாடசihலையின் முன்னாள் ஆசிரியையும் நிர்வாகசபை உறுப்பினருமாகிய திருமதி .செல்வநாயகி துரைராஜசிங்கம் , பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், பிரபல ஊடகவியலாளருமான திரு.இளையதம்பி தயானாந்தா, பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் சார்பில் உப-பொருளாளர் திரு.ந.பிரகலாதீஸ்வரன், கணக்காய்வாளர் திரு.கந்தப்பு அம்பலவாணர்அவர்களும், சிறப்பு அதிதிகளாக ஓய்வுபெற்ற ஆசிரிய, ஆசிரியைகள் ,மற்றும் அவர்களுது உறவினர்களும் கலந்து கொண்டனர்.
”கரிஷ் மெலோடிஸ் இன்னிசை குழுவினரின்” இதமான மெல்லிசைப் பாடல்களுடன் விழா நிகழ்வுகள் ஆரம்பமானது. அதனையடுத்து தலைவர் உரையாற்றுகையில், அனைவரயும் வரவேற்றுக்கொண்டு, கல்லூரி வரலாறு, மற்றும் அதிபர்களாக, ஆசிரியர்களாக கடமை ஆற்றியவர்கள் பற்றியும் விழா நேரத்தை கருத்தில் கொண்டு சிறு குறிப்புகளுடன் எடுத்துரைத்தார். 125 வருட வரலாற்றை சொல்வதற்கு ஒரு மேடை காணாது என்றும் குறிப்பிட்டு, பெற்ற தாயையும், பிறந்த பொன் ஊரையும், கற்ற பாடசாலை இ கல்லூரிகளை மறந்தவர்கள் செய்நன்றி மறந்தவர்கள் என்றும், இவர்கள் வாழ்க்கையின் எந்த உச்சிக்கு போனாலும் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களே என்று குறிப்பிட்டார்.
மேலும் தலைவர் உரையில், இந்த நிகழ்வுக்கு சங்கம் தற்பொழுது பிருத்தானியாவில் வாழும் ஆசிரிய ஆசிரியைகள், மற்றும் அதிபர்கள், இவர்களின் உறவினர்கள் அனைவைரையும் வரவேற்று அவர்களுக்கு ஒரு விருது வழங்கி கெளரவிக்கு முகமாகவே இதனை சங்கம் முன்னெடுத்ததாக குறிப்பிட்டார். மேலும் தன் உரையில், இங்கு வாழும் ஆசிரய, ஆசிரியைகளையோ , அல்லது அவர்களது உறவினர்களையோ சங்கம் மேற்படி விழாவிற்கு அழைப்பு விடுக்க தவறியிருப்பின், நேர்முகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அடுத்து உரையாற்றிய பிரதம விருந்தினர் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி புலவர் .பூரணம் ஏனதிநாதன் அவர்கள் தனது உரையில் 1888 இல் இருந்து இன்றுவரை மிக அழகாக , ஆளுமையாக, அன்பாக , அர்த்தமுடன் வீற்றிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இடைவேளையை தொடர்ந்து சிந்து சர்வானந்தன் அவர்களின் 25இக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட குழு நடனம் ஆரம்பமானது. கண்ணன் கதை நடனம் மிக அழகாக தொகுத்து வழங்கப் பட்டிருந்தது.
தொடர்ந்து பிரான்ஸ் நலன் புரிச் சசங்கதின் நிர்வாகசபை உறுப்பினரும், கல்லூரியின் முன்னாள் ஆசிரியையுமான திருமதி செல்வநாயகி துரைராஜசிங்கம் அவர்கள் விழாப் பற்றியும், கல்லூரி பற்றிய கவிதை ஒன்றினையும் வாசித்தார்.
அடுத்து உரையாற்றிய கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உப பொருளாளர் திரு.நடராஜா பிரகலாதீஸ்வரன் கல்லூரி பற்றியும், கல்லூரியின் ஒருசில பழைய நினைவுகளுடனும் தனது உரையை முடித்துக் கொண்டார்.
”காரை வைரஸ் ,, குழுவினரின் மேலத்தேய நடனத்தை பிரவீனா ரமேஷ் குழுவினர் வழங்கியிருந்தனர்.
இதன்பின்னர் ஆசிரிய, ஆசிரியைகள் கௌரவிப்பு வைபவம் நடைபெற்றது. Dr.சரோஜினி ரட்ணகுமார்(வினாசித்தம்பி மாஸ்டர் அவர்களின் மகள்) அவர்கள் வருகை தந்திருந்த தற்பொழுது லண்டனில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்கள் ,ஆசிரிய ஆசிரியைகளின் வாழ்க்கைத் துணைகள், அல்லது அவர்களின் பிள்ளைகள் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மேற்படி கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், பிரான்ஸ் நலன் புரிச் சங்கத் தலைவருமான திரு.S .செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர்) அவர்கள் உரையாற்றினார். இவர் தனது வழமையான சுவாரஷ்யமான பாணியில் கல்லூரி பற்றிய விடயங்களை தொகுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் கவிஞர்.கலாநிதி காரை.சுந்தரம்பிள்ளை அவர்களின் மகளும் யாழ். பல்கலைக்கழகப் பட்டதாரியுமான திருமதி மாதவி சிவலீலன் தலைமையில் ” புலம் பெயர் வாழ் மாணவர்கள் தாயகக் கல்வியில் அக்கறை உள்ளார்களா??இல்லையா??” எனும் தலையங்கத்தில் பட்டி மன்றம் ஆரம்பமானது.இல்லை எனும் அணியின் கீழ் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், பிரபல ஊடகவியலாளருமான திரு.இளயதம்பி தயானந்தா, உலக இந்து இளைஞர் மன்ற தலைவர் திரு.கணேஷ்குமார் , மற்றும் இராசசேகரம் சிவனேஸ்வரன் அவர்களும், உள்ளார்கள் என்ற அணியில், எழுத்தாளர் ஊடகவியலாளருமான திரு.M .N .M அனஸ் , வேலணை மத்திய மகா வித்தியாலய பழையமாணவர் சங்கத் தலைவர் திரு.நடா சிவா, திரு. நேரு மாஸ்டர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பான, நகைச்சுவையான விவாதம் ஒன்றை நடாத்தினர். இறுதியில் உள்ளார்கள் அணியே வெற்றி பெற்றது.
காரைநகரின் எல்லாப் பாகத்திலிருந்தும் மருத்துவர்கள், பொறியியாலளர்கள், கணக்காளர்கள், கல்வியாளாளர்கள் எனப்பல கல்விமான்களை உருவாக்கி கீர்த்திமிகு சாதனைகள் படைத்த காரைநகரின் கலங்கரை விளக்கமான கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125 வது ஆண்டு கொண்டாட்டத்தின் முதல் விழாவாக பிரித்தானியாவில் அரங்கேறிய இவ்விழா வெற்றிவிழாவாக தலைவரின் நன்றி உரையுடன் இனிதே நிறைவடைந்துள்ளது.
No Responses to “பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ஆதரவில்125 வது ஆண்டு விழா கொண்டாட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது.”