வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் மாகாண மட்ட பண்ணிசைப் போட்டி 2016.11.12 சனிக்கிழமை அன்று யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. அப் போட்டியில் பிரிவு III ஐ சேர்ந்த செல்வி ஆனந்தராசா அமிர்தா பங்குபற்றி, இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.
இம் மாணவிக்கான வெற்றிப் பாராட்டுச் சான்றிதழும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு 2016.11.19 அன்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கௌரவ கல்வியமைச்சர் திரு த. குருகுலராஜா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மாகாண மட்ட பண்ணிசைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற செல்வி ஆனந்தராசா அமிர்தா என்ற மாணவியையும், மாணவியை சகல வழிகளிலும் ஊக்குவித்த ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் (இசை ஆசிரியர்), திருமதி பங்கயச்செல்வி முகுந்தன் (இசை ஆசிரியர்), ஆகியோரை கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.
No Responses to “மாகாண மட்டத்திலான பண்ணிசைப் போட்டியில் செல்வி ஆனந்தராசா அமிர்தா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை”