பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு
கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தியத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கத்தின் (தாய்ச் சங்கம் காரைநகர்) வேண்டுகோளுக்கு அமைய பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களினதும் அபிமானிகளினதும் அநுசரணையுடன் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து முன்னெடுக்கும் மேற்படி மகா வித்தியாலயத்தின்(காரைநகர் இந்துக் கல்லூரி)125வது ஆண்டு நிறைவு விழாவினை 23-06-2013 ஞாயிறு பிற்பகல் 06.00 மணியளவில் கொண்டாடுவதற்கு நிர்வாக சபை முடிவுசெய்துள்ளது.
இவ்விழா முன்னெடுப்பதற்கான நோக்கங்கள் கீழ்கண்டவாறு சங்கத்தினால் குறிப்பிடப்படுகிறது
1. கல்லூரியின் வளர்ச்சி சாதனைகளை நினைவு கூருதல்
2. கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு புலம்பெயர் வாழ் பழைய மாணவர்களும் மக்களும் எவ்வாறு உதவுவதென விழிப்படைய வைத்தல்
3. இவ்விழாவில் சேகரிக்கப்படும் தொகையை கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிரந்தர வைப்புக்கணக்கில் (Fixed Deposit) இட்டு அதில் வரும் மாதாந்த வருமானத்ததை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கும் அவர்களின் பாடப் புறச்சேவையில் (;(Extra Curriculam Activities) பங்குகொள்ள ஏற்படுகின்ற நிதி நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கும் பயன்படுத்துதல்.(கல்வித்திணைக்களத்திலிருந்து உதவி பெறமுடியாத சேவைகள்)
எனவே மேற்குறிப்பிட்டுள்ள இக்கலலூரிக்கான சேவைகளையும் நோக்கங்களையும் இந்த 125வது ஆண்டு நிறைவு விழாவில் எம்மால் முடிந்தளவு பூர்த்தி செய்ய பிரித்தானியா வாழ் காரை மக்களினதும் கல்லூரியின் பழைய மாணவர்களினதும் ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வேண்டி நிற்கின்றனர் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினர்.
No Responses to “பிரித்தானியாவில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125வது ஆண்டு விழா ஜூன்23 இல் கொண்டாடப்படுகிறது”