கண்ணீர் வணக்கம்
திருமதி நாகம்மா தம்பையா
(விளானை களபூமி, காரைநகர்)
யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் முதலாவது நிர்வாக சபையில் உப-தலைவராகவும் பின்னர் தலைவராகவும் பதவி வகித்து சங்கச் செயற்பாடுகளில் ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றவருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி. நாகம்மா தம்பையா இறைபதம் அடைந்துள்ளார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளது.
எமது கல்லூரி வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள ஆசிரியர் அம்பிகைபாகன் அவர்கள் எமது ஊரில் பல நல்மாணக்கரை உருவாக்கியவர் என்பதுடன் கொழும்பு வலய ஆசிரிய ஆலோசகராகவும் சமாதான நீதவானகவும் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய புத்திரரைப் பெற்ற தாயாரின் பிரிவால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது சங்கம் அனுதாபத்தினையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பரத்த்pல் உறையும் சிவகாமி சமேத நடேசப் பெருமானை இறைஞ்சுகின்றது;.
யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் – கனடா
No Responses to “திருமதி.நாகம்மா தம்பையா அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்”