தலைவர், செயலாளர்
நிர்வாகசபை
யா-தியாகராசா ம.ம.வி,(காரைநகர் இந்துக் கல்லூரி)
பழைய மாணவர் சங்கம்-கனடா
இலங்கையின் தலையாக விளங்குகின்ற யாழ்ப்பாணமாவட்டத்தின் கற்றோர் நிறைந்த, பண்பாடு மலிந்த, பாரம்பரிய விழுமியங்களை கண்போல காப்பாற்றிவருகின்ற சிவபூமி எனப் போற்றப்படும் காரைநகர் திரு நிறைந்த
தெய்வீக பூமியாகும். இங்கு வாழும் சான்றோர்கள் சைவசமய சீலர்களாக பக்தி உள்ளத்துடன் வாழ்கின்றனர். சிவநெறி தழைத்தோங்கும் ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் நாதஸ்வர வித்துவான் காரையம்பதி திரு.N.மு கணேசன் கைலாயக்கம்பர்,அவர்களின் புதல்வி இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A,M.Phil (இசைத்துறை விரிவுரையாளர். யாழ் பல்கலைக்கழகம்) அவர்கள் யா-தியாகராசா ம.ம.வி,(காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டு நிதிக்காக நாளை(27.06.2015) நடத்தவிருக்கும் இன்னிசைக் கச்சேரிக்கு எமது வாழ்த்துகள்.
‘இசையால் வசமாக இதயம் ஏது’. என்ற கூற்றுக்கிணங்க காலத்தின் தேவைகருதி தற்பொழுது புலம்பெயர் தேசங்களில் எமது கிராமத்து இளம் சமூதாயத்தினர் இசைத்துறையில் கூடுதல் ஆர்வத்துடன் சங்கீதம் பயிலுகின்றனர். அவர்களுக்கு ஓரு உறவுப்பாலத்தை ஏற்பாடு செய்த பழைய மாணவர் சங்கம்-கனடாக கிளைக்கு எமது வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.
‘இன்னிசைக் கச்சேரி’ சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின் சௌபாக்கியங்கள் கிடைத்து இன்புற வாழ்த்துகின்றோம்.
‘இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க|
நன்றி
இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்
26.06.2015
No Responses to “செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A,M.Phil அவர்களின் இன்னிசைக்கச்சேரி வெற்றிபெற சுவிஸ்-காரை அபிவிருத்தி சபை வாழ்த்து”