இரண்டாம் தவணைக்கான வகுப்பு முதல்வர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் முதன்மை பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆதரவுடன் இடம்பெற்ற கௌரவிப்பு வைபவத்தின்போது நடைபெற்றிருந்தது.
முதன்மைப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு வைபவம் கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் தலைமையில் கல்லூரியின் நடராசா மண்டபத்தில் 24-04-2013 அன்று நடைபெற்றிருந்தது.
பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும் பழைய மாணவர்களின் தாய்ச் சங்க செயலாளர் இ.திருப்புகழுர்சிங்கம் மற்றும் மாணவர்களின் பெற்றொர்களும்; கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில், இரண்டாம் தவணைக்ககான வகுப்பு முதல்வர்களாகத் தெரிவுசெய்யபட்ட வகுப்பு முதல்வர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
வகுப்பு ஒழுங்கின்படி அந்தந்த வகுப்பாசிரியர்கள் முறையே வகுப்பு முதல்வர்களுக்கான சின்னத்தை அணிவித்தனர்.
இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை பார்வையிடலாம்.
No Responses to “இரண்டாம் தவணைக்கான வகுப்பு முதல்வர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு”