கடந்த ஆகஸ்ட் 2013 இல் நடைபெற்ற 2013 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினடிப்படையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஐந்து மாணவிகள் இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பல்கலைக் கழகங்களின் நுண்கலைப் பீடங்களுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். .
தீவக வலயப் பாடசாலைகளில் எமது கல்லூரியில் இருந்தே அதிகூடிய எண்ணிக்கையான மாணவர்கள் தெரிவாகி தீவக வலயத்திலேயே எமது கல்லூரி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய மாணவிகளின் பெயர் விபரம் வருமாறு
மாணவர் பெயர் | பாடம் | பல்கலைக்கழகம் | |
1. | ஆனந்தா காங்கேயன் | சித்திரம் | இராமநாதன் நுண்கலைப்பீடம், யாழ்ப்பாணம் |
2. | சிவநிறஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | நடனம் | இராமநாதன் நுண்கலைப்பீடம், யாழ்ப்பாணம் |
3. | சகிதா முடிராசா | நடனம் | இராமநாதன் நுண்கலைப்பீடம், யாழ்ப்பாணம் |
4. | நாகசிந்துஜா நாகேந்திரம் | நடனம் | விபுலானந்தா அழகியற் கல்லூரி, மட்டக்களப்பு |
5. | வதனி பாலச்சந்திரன் | சங்கீதம் | விபுலானந்தா அழகியற் கல்லூரி, மட்டக்களப்பு |
அதிகூடிய எண்ணிக்கையில் பல்கலைக் கழக அநுமதி பெற்று தீவக வலயத்தில் முதலிடம் பெற்ற சாதனை படைத்து எமது கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரிய மணிகளையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பெருமிதத்துடன் பாராட்டி வாழ்த்துகின்றது.
No Responses to “தீவக வலயத்தில் முதலிடம் பெற்று எமது கல்லூரி சாதனை! பல்கலைக் கழகத்திற்கு ஐந்து மாணவிகள் அனுமதி!”