தம்பிராசா மாஸ்டர் என காரைநகர் மக்களால் நன்கறியப்பட்ட விளானை, களபூமியைச் சேர்ந்த அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் நினைவாக அன்னாரின் மனைவியும் எமது சங்க அங்கத்தவரும்; கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும் களபூமி சுந்தரமூர்த்தி வித்தியாலய முன்னாள் அதிபருமாகிய திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்கள் நாற்பதினாயிரம் ரூபாவினை வழங்கி உதவியுள்ளார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்) தர பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்றிருந்த நால்வருக்கே இப்பரிசுத் தொகை கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
அமரர் தம்பிராசா மாஸ்டர் நீண்ட ஆசிரியப் பணியாற்றியவர் என்பதுடன் கல்லூரியி;ன் உப அதிபராகவும் பதவி வகித்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவியவர். கனடாவில் பழைய மாணவர் சங்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவர் என்பதுடன் அச்சங்கத்தின் ஆரம்ப கால தலைவராகவும் பதவி வகித்து சங்கம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கும் பாடசாலையின் பல வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்கும் இறுதி மூச்சுவரை அயராது உழைத்தவராவர்.
தம்பிராசா மாஸ்டர் தமது கணித ஆசிரியர்களான அமரர் மு.அம்பலவாணர், அமரர் க.வே.நடராசா ஆகியோரின் நினைவாக கணித பாடத்திற்கான சிறப்புப் பரிசில் வழங்க முப்பதினாயிரம் ரூபாவினை சென்ற ஆண்டு அமரத்துவமடைவதற்கு சில நாட்களுக்கு முன்பாக வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “‘அமரர் தம்பிராசா மாஸ்டர் நினைவுப் பரிசு’ கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கு வழங்க நாற்பதினாயிரம் ரூபா உதவி”