கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் தலைமைத்துவமும் மனிதமேம்பாடும் பற்றிய பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு இலங்கை சத்திய சாயி கல்வி நிறுவனத்தினரால்; நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கை வடபிராந்தியத்தைச் சேர்ந்த நான்கு வளவாளர்கள் கலந்து கொண்டு வழிநடத்தியிருந்தனர். மனித மேம்பாட்டு இணைப்பாளர் திரு.K.V.சிவநேசன் நிறுவனத் தலைவர் திரு.S.R.சரவணபவன், முன்னாள் தலைவர் Dr.R.கணேசமூர்த்தி சேவை இணைப்பாளர் திரு..S.சிறீஸ்கந்தராஜா ஆகியோரே வளவாளர்களாக இக்கருந்தரங்கினை வழிநடத்தியிருந்தனர்.
இக்கருத்தரங்கில் தலைமைத்துவம் பற்றிய விளக்கம், தலைமைத்துவ பண்புகள், தலைமைத்துவத்தின் மூலம் அடையக் கூடிய திறன்கள், மனிதமேம்பாடு தொடர்பான விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
விரிவுரைகள், குழுக் கலந்துரையாடல்கள், தலைமைத்துவ விளையாட்டுகள்,
அனுபவப் பரிமாற்றங்கள் என்பனவற்றின் மூலம் இக்கருத்தரங்கு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமைக்கப்பட்டிருந்தது.
இக்கருத்தரங்கில் மாணவ முதல்வர்களும், வகுப்பு முதல்வர்களும் க.பொ.த(சா-த), மற்றும் க.பொ.த(உ-த) வகுப்புகளில் பயிலும் மாணவர்களுமாக 59 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இக்கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இலங்கை சத்திய சாயி கல்வி நிறுவனத்தினால் விரைவில் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிபர் தெரிவிக்கிறார்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “தலைமைத்துவமும் மனிதமேம்பாடும் பற்றிய மாணவர்களுக்கான கருத்தரங்கு”