கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் இருந்து கடந்த டிசம்பர் 2013 க.பொ.த சா-த பரீட்சையில் தோற்றி சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு அண்மையில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளார் திரு.பு ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.க.நிமலதாசனும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்புப் பெறுபேறு பெற்றமைக்காக பாராட்டுப் பரிசு பெற்று கௌரவிக்கப்படும் மாணவர்களின் பெற்றோரும் எதிர்வரும் டிசம்பர் க.பொ.த சா-த பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
கல்லூரியில் 6A,B,C, S என்ற முதன்மைப் பெறுபேற்றினைப் பெற்ற செல்வி.தீபிகா நவரத்தினம், மற்றும் ஆங்கில மொழி மூலம் தோற்றி 5A,2B,2C என்ற முதன்மைப் பெறுபேற்றினைப் பெற்ற செல்வன் சிவஞானம் ராகவன் ஆகியோருடன் செல்வன் தர்மலிங்கம் நாகரஞ்சன் (5A 2B 1C 1S), செல்வி டிலானி கார்த்திகேசு (5A 2B 1C 1S), செல்வன் கோமளேஸ்வரன் பாலசயந்தன் (4A 2B 2C 1S) செல்வன் கனகலிங்கம் வினோதன் (3A 3B 2C), செல்வி றோமிலா தேவராசா (3A 3B 1C 1S) ) ஆகிய மேலும் ஐந்து சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களே பாராட்டுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இம்மாணவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவர்களிற்கு வழங்கி உதவும் பொருட்டு பழைய மாணவர்களின் கனடாக் கிளை, முப்பதினாயிரம் ரூபாவினை(30,000 ரூபா) பழைய மாணவர்களின் தாய்ச் சங்க நிர்வாகத்திற்கு கடந்த ஏப்பிரல் மாதத்தில் அனுப்பி வைத்திருந்தது.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் உரையாற்றுகையில், இந்நிகழ்விற்கு நிதியனுசரணை வழங்கிய கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கு பாடசாலை சார்பில் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
அதிபர் மேலும் தமது உரையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவர்களில் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் முதன்மை மாணவர்களிற்கு ஊக்குவிப்பு நிதியினை பிரபல வர்த்தகர் S.P.S. என அழைக்கப்படும அமரர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக அவரது மகன் திரு.அரிகரன் அவர்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக வழங்கி உதவ முன்வந்திருக்கின்றார் என்ற செய்தியினையும் அறிவித்தார்.
சிறந்த பெறு பேறுகளைப் பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களையும் பழைய மாணவர்களின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “க.பொ.த சா-த-2013 இல் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை அநுசரணை”