கலாநிதி ஆ.தியாகராசா மத்தியமகா வித்தியாலயம் தனது தளர்விலாத கல்விப்பணியில் 125 ஆண்டுகளை கடந்த ஆண்டில்(2013) நிறைவு செய்தமையைக் குறித்து கல்லூரி அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழும் பெரு விழாவாகக் கல்லூரி சமூகம் கொண்டாடியிருந்தமை அனைவரும் அறிந்ததே.
இவ்விழாவினையொட்டி வெளியிடப்பட்ட ‘சயம்பு’ சிறப்பு மலரில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிவந்த கட்டுரையை இங்கே தருகின்றோம்.
அதிபரின் உள்ளத்திலிருந்து…
தன்னிகரற்ற கல்விப் பணியாற்றி இன்றும் பொலிவுடன் தலைசிறந்து விளங்கும் எம் காரை மண்ணின் ஒப்பற்ற கலங்கரை விளக்காக ஒளிவீசிக் கொண்டிருக்கும் காரை இந்து என செல்லமாக அழைக்ப்படும் யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி. இன்று 125 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப்பதையிட்டு புளகாங்கிதம் அடைகின்றேன். இக்கல்லூரியின் விழுதுகள் இன்று உலகெங்கும் வேரூன்றி நன்றியுணர்வுடன் அன்னையின் பெருமையை பறைசாற்றி விழா எடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எனக்கும் ஞான ஒளியூட்டி மனம் நிறைந்த நல்வாழ்வும் அளித்த இக்கல்லூரித் தாய் மேலும் பல்லாயிரம் ஆண்டு அட்சய பாத்திரமாகத் திகழ்ந்து எம் சமூகத்தின் அறிவுப் பசியைத் தீர்க்க எல்லாம் வல்ல காரை திண்ணபுரத்து சிதம்பரேஸ்வரப் பெருமானின் திருவருளை வேண்டி வாழ்த்துகின்றேன்.
இக்கல்லூரி 125 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இக்கல்லூரிக்கு உயிர் கொடுத்த மும்மூர்த்திகளான முத்து சயம்பு, கலாநிதி,ஆ.தியாகராசா, திருமதி தங்கம்மா நடராசா ஆகியோரின் ஒப்பற்ற சேவைக்கு தலைவணங்குகின்றேன். மேலும் இக்கல்லூரியில் அதிபராக, பிரதி அதிபராக, உபஅதிபராக, ஆசிரியர்களாக, கல்விசாரா ஊழியர்களாக தமது அர்ப்பணமிக்க சேவைகளை வழங்கி கல்லூரித் தாயின் புகழை நாற்றிசையும் பரப்பிய, பரப்பிக் கொண்டிருக்கும் அனைத்துப் பேராற்றல் மிக்க சேவையாளர்களது சேவைகளையும் பாராட்டுகின்றேன்.
அன்னை மடியில் தவழ்ந்து, பல்கலையும் கற்றுத் தேர்ந்து எண்டிசையும் ஆங்காங்கே நல்முத்துக்களாய், இரத்தினங்களாய், வைரங்களாய் மிளிர்ந்து கொண்டு அன்னையின் பெருமையை உலகிற்கு எடுத்தியம்பிக் கொண்டும், அவளின் தன்னிகரற்ற வளர்ச்சிக்கு ஊன்று கோல்களாய்த் திகழும் இக்கல்லூரியின் பழைய மாணவர்களின் நன்றியுணர்வைப் பாராட்டுகின்றேன். பெரிதும் மதிக்கின்றேன். மேலும் அவ்வப்போது தேவையுணர்ந்து உதவிக்கரம் கொடுக்கும் அரச நிறுவனங்களான வலயக் கல்வி அலுவலகம், மாகாணக் கல்வித் திணைக்களம், கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஒப்பற்ற சேவைக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்ற வானினும் நனி சிறந்தனவே’
அந்த வகையில் என் அன்னைக்கு சேவைபுரிய எனக்கு வாய்ப்பளித்த வடமாகாணக் கல்விச் செயலாளர் திரு.சி.சத்தியசீலன் அவர்களுக்கும், வடமாகாண பிரதிக் கல்விச் செயலாளர் திரு.ப.விக்னேஸ்வரன் அவர்களுக்கும், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தி. Nஐhன் குயின்ரஸ் அவர்களுக்கும் என்னை இன் முகத்துடன் வரவேற்ற பாடசாலைச் சமூகத்தினருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
கல்லூரி 125 ஆவது அகவையில் கால் பதிக்கும் வேளையில் ‘காலம் பொன்னானது’ என்பதை நினைவுபடுத்தும் வகையிலான நாட்காட்டி வெளியீட்டு விழா அன்று (18.01.2013) விண்ணவர் வான் மலர் தூவ எதிர்பாராத விதமாக எனது பதவியேற்பு நிகழ்வையும் ஏற்படுத்திய கலைமகளிற்கு கோடி நன்றிகள். பதவியேற்பை அறிந்து தமது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்த கனடா, கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினருக்கும். லண்டன் காரை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும், என்னை வளர்த்தெடுத்த ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
பதவியேற்றவுடன் உடனடியாக வந்து தோள் கொடுத்த, இன்றும் கல்லூரியின்; வளர்ச்சிக்காக அயராது உழைக்கின்ற பழைய மாணவர் சங்கத்தின் காரைநகர் தாய்ச்சங்க உறுப்பினர்கள் அனைவரது சேவைகளையும் நன்றியுடன் பாராட்டுகின்றேன்.
நான் இப்பாடசாலையைப் பொறுப்பேற்ற போது நான் கற்ற காலத்திலிருந்து இரு தசாப்தங்கள் கடந்து இன்றைய நிலையில் பல வளர்ச்சிகளை இக்கல்லூரி அடைந்திருக்கின்ற போதிலும், இன்றைய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப மேலும் பல வளர்ச்சிகளை துரித கதியில் அடையப்பட வேண்டிய தேவைப்பாடுள்ளது. அவ்வகையில் பாடசாலையின் நிவர்த்திக்க வேண்டிய தேவைப்பாடுகள் உடனடியாக இனங்காணப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் கடந்த ஆறு மாத காலத்துள் பின்வரும் செயற்றிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பிள்ளைநேயப் பாடசாலைக் கவின்நிலையை ஏற்படுத்தல். (Child Friendly School)
1.அடிப்படைத் தேவைகள் நிறைறேறல்.
i. மலசலகூட கழிநீர்க்குழி சுத்திகரிப்பு, குழாய் நீர் விநியோக ஒழுங்கமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. (OSA)
ii. அமரர் கணபதிப்பிள்ளை திருவேங்கடம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் (கனடா) நிதியீட்டத்தின் மூலம் சிற்றுண்டிச் சாலை அமைக்கப்பட்டது. (OSA)
2. பாதுகாப்பான பாடசாலைச் சூழலை ஏற்படுத்தல்
i. சுற்றுப்புறச் சூழலில் காணப்பட்ட கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டது (OSA)
ii. பழைய கட்டடத்துள் சேமிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பழைய தளபாடங்கள் அகற்றப்பட்டு திருத்தத்திற்குட்படுத்தப்பட்டது. .(ZEO) பொருத்தமற்றவை மாணவர் நடமாட்டத்திற்குட்படாத பகுதியில் ஒழுங்காக அடுக்கப்பட்டது. (OSA)
iii. பாடசாலை வளாகத்தினுள் உள்ள 3 கிணறுகளிற்கு கம்பிவலையாலான பாதுகாப்பு மூடிகள் இடப்பட்டது. (SDMG)
iஎ. மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்காக சைக்கிள் தரிப்பிடம் அமைக்கப்பட்டது. இதற்கான நிதியுதவியினை திரு.ப.தவராசா- லண்டன் அவர்கள் முழுமையாக வழங்கியிருந்தார்.
3. மகிழ்வான கற்றற் சூழலை ஏற்படுத்தல்
i. இருள்கவிந்த நிலையில் காணப்பட்ட நடராஐh மண்டபத்தின் மேற்குப்புற வகுப்பறைகள் கண்ணாடி ஓடுகள் இடப்பட்டு ஒளியூட்டப்பட்டதுடன் வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டது. (1000 S.P)
ii. விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான குழாய் நீர் விநியோகம் மற்றும் யன்னல்களிற்கு வர்ணம் தீட்டப்பட்டது. (SDMG)
iii. செயற்பாட்டறை, நூலகம், புவியியல் அறை, தரம் 10 வகுப்பறை ஆகியவற்றில் உடைந்த நிலையில் காணப்பட்ட அனைத்து யன்னல்களும் திருத்தம் செய்யப்பட்டதுடன், புதிதாக 8 யன்னல்கள் போடப்பட்டது.. (1000S.P)
iஎ. அலுவலக கவின்நிலை மேம்படுத்தப்பட்டது. (1000S.P)
எ. திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன்(கனடா) அவர்களின் முழுமையான நிதியீட்டத்தின் மூலம் பாடசாலை ஸ்தாபகர் முத்து சயம்பு அவர்களின் திருவுருவச் சிலை புனரமைக்கப்பட்டது. (OSA)
எi. பழைய மாணவன் திரு.க.ஈஸ்வரபாதம் அவுஸ்திரேலியா அவர்களின் நிதியீட்டத்தின் மூலம் சரஸ்வதி சிலை மற்றும் நந்தி ஆகியவற்றிற்கு வர்ணம் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.
4. பாடசாலை வளங்களின் பயன்பாட்டை உறுதிப்படுத்தல்
i. கணனிக் கற்கை நிலையத்திலும், பல்லூடக அறையிலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கணனிகளில் 60 % மானவை திருத்தத்திற்குட்படுத்தப்பட்டு பாவனைக்குட்படுத்தப்பட்டது. (SDMG)
ii. பல்லூடக அறையிலுள்ள மின்னியல், இலத்திரனியல் கற்றல் உபகரணங்கள் தொடர் பாவனைக்கு ஏற்ற வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டு மாணவர் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
iii. பாடசாலையின் விசேட அறைகளான கணனிக் கற்கை நிலையம்;, பல்லூடக அறை, E.-நூலகம் ஆகியவற்றின் பயன்பாட்டை மேம்படுத்த உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு நவீன கற்றல் உபகரணங்கள் மூலமான கற்றல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5. இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர் பங்குபற்றல் வீதத்தை அதிகரித்தல்
i. மாணவ முதல்வர்கள், வகுப்பு முதல்வர்களுக்கான சின்னம் தயாரித்து வழங்கப்பட்டது.(OSA)
ii. திரு.கோ.ஸ்ரீவரதன் அவர்களின் தனிப்பட்ட நிதியீட்டத்தின் மூலம் வெகுவிமரிசையாக வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்த்தப்பட்டது.
iii. வலய, மாகாணமட்ட தமிழ்த்தினப்போட்டி, ஆங்கிலதினப்போட்டி, மெய்வல்லுநர் போட்டிகள், பெருவிளையாட்டுக்களுக்கான போக்குவரத்து, ஆடை அணிகலன்கள் கொள்வனவுக்கான நிதியை லண்டன் காரை அபிவிருத்தி சங்கம் வழங்கியமையால் அதிகளவிலான மாணவர்கள் போட்டிகளில் பங்குபங்றுவற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
iஎ. பெண்கள் சாரணியம் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான உடைகள் தைக்கப்பட்டது. (OSA)
6. பாடவிதான செயற்பாடுகளில் மாணவர் பங்குபற்றல் வீதத்தை அதிகரித்தல்
i. க.பொ.த.(சா/த) மற்றும் க.பொ.த.(உ/த) பரீட்சைகளில் அதிசிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இதற்கான நிதியினை கனடா பழைய மாணவர் சங்கம் வழங்கியது.
ii. அவுஸ்திரேலியா காரை நலன்புரிச் சங்கத்தின் நிதியீட்டத்தின் மூலம் தரம் 6-8 வரையான மொழியாற்றல் குன்றிய 40 மாணவர்களுக்கான மொழிவிருத்திச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 30 மாணவர்களுக்கு வலயக் கல்வியலுவலகத்தின் நிதியனுசரணையுடன் மொழிவிருத்திச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
iii. இவற்றை விட மேலும் கல்வித்திணைக்களத்தின் ESDFP நிதியீட்டத்தின் மூலம் பாட ரீதியான அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் பாடப்புறநேரத்தில் மேற் கொள்ளப்படுகிறது.
iஎ. க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான பாடரீதியாக மேலதிக வகுப்புக்கள் கடந்த கால வினாத்தாள்கள் மீட்டலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
விசேட செயற்றிட்டம்
• ‘1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் 4 அறைகளைக் கொண்ட இருமாடிக் கட்டடமாக மகிந்தோதய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டு வருகின்றது.
குறுகிய காலத்தில் சிறுசிறு வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் மேலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இப்பாடசாலை வேண்டி நிற்கின்றது. பாடசாலை வேண்டி நிற்கும் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்ற பாடசாலைச் சமூகம் இணைந்து முன்வரவேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
அவ்வகையில் இனங்காணப்பட்ட பிரதானமான வேலைத்திட்டங்களாவன,
1. பாடசாலைச் சுற்றுப்புறம் எல்லைப்படுத்தி பாதுகாப்பு வேலிகளை அமைத்தல்
2. விளையாட்டு மைதானப் புனரமைப்பும், பார்வையாளர் அரங்கம் (பமிலியன); அமைத்தலும்
3. உள்ளக வியைளாட்டரங்கம் அமைத்தல்
4. பாடசாலைக்கான பெயர் வளைவு அமைத்தல்
5. பாடசாலையின் வடக்கு, தெற்கு வளாகங்களைக் கவின்நிலைப்படுத்தும் வகையில் அழகிய புந்தோட்டம் அமைத்தல்.
6. சயம்பு மண்டபம், நூலகத்தின் கூரைகள் திருத்தம் செய்தல்.
7. நூலகத்தின் வாசகர் பகுதி மற்றும் கணனிக் கற்கை நிலையத்தின் மாணவர் பயன்பாட்டுப் பகுதி விஸ்தரிக்கப்படல் வேண்டும்
8. வகுப்பறைகளுக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்தல்.
9. வகுப்பறைக் கவின்நிலை இன்றைய கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் நவீன மயப்படுத்தல்.
10. பாடசாலையின் தெற்கு வளாகத்தில் பெண் பிள்ளைகளுக்கான மலசலகூடம் அமைத்தல்.
11. பாடசாலைக் கட்டடத்தின் உள்ளும், புறமும் வர்ணம் தீட்டி அழகுபடுத்தல்
12. பாடசாலையின் வீதியின் இருபுறமும் உள்ள வடக்கு, தெற்கு வளாகங்களை இணைக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளல். இதன் மூலம் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் பாடசாலை வளாகத்தைவிட்டு வெளியே செல்லலை தவிர்க்க முடியும் என்பதுடன் பாடசாலையின் ஒழுக்க விழுமியங்களை பேண வழிவகுக்கும்.
இவ்வேலைத்திட்டங்களை நிறைவு செய்து, மாணவர்களினதும், ஆசிரியர்களினதும், சமூகத்தினரதும் மனதிற்கு ரம்மியமான இடமாக பாடசாலையை மாற்றுவதன் மூலம் ‘தரமான கல்வி மூலம் தரமான சமுதாயம’ என்ற இலக்கை அடைவதுடன் எதிர்பார்க்கும் கற்றல் விளைவுகளை அடைவதற்கான வாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்தலாம.
நன்றி: சயம்பு மலர் – 2013
No Responses to “அதிபரின் உள்ளத்திலிருந்து…”