பூ மரங்களையும் நிழல் தரும் மரங்களையும் பாடசாலை வளாகத்தில் நடுவதன் மூலம் பாடசாலை வளாகம் எழில் மிகு தோற்றம் பெறும். கவினுறு நிலை ஏற்படும். பாடசாலைக்கு உள் நுழையும் போது மாணவர் மனதில் புத்தூக்கம் தோன்றும். மன மகிழ்வு ஏற்படும். இயற்கையின் வனப்பில் இறையுணர்வு தோன்றும். மனதில் அமைதியும் சாந்தியும் பிறக்கும். மாணவர் மனதில் இயற்கையின் அழகுணர்வு விதைக்கப்படும். எதிர்காலத்தில் இயற்கையை வனப்பாக்கவும், வளர்க்கவும், பேணவும் பாடசாலை கற்றுக் கொடுக்கும். மாணவர்கள் மன மகிழ்வுடன் கற்றலுக்கான சூழல் அமையும். மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும்.
சுற்றாடல் முன்னோடிக்குழு (Environmental Club) மதர் சிறீலங்கா (Mother Sri Lanka) ஆகிய செயற் திட்டங்கள் ஊடாக க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தமது இரண்டு ஆண்டு கல்வி நெறியின் போது தனியாக ஒன்றும், குழுவாக ஒன்றுமாக இரண்டு செயற்திட்டங்களை நிறைவு செய்தல் வேண்டும். மாணவர்களினது செயற்திட்டங்களுக்கு செயற்திட்ட பொறுப்பாசிரியர்களும் பாடங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களும் வழிகாட்டி செயற்திட்டம் நிறைவு பெற பணி ஆற்றுகின்றனர்.
செயற்திட்டம் இரண்டு பாடசாலை தவணைகளை கொண்டதாகும். மாணவர்கள் தமது இரண்டு ஆண்டு கல்வி நிறைவு பெறும் வரை செயற்திட்டத்தை அபிவிருத்தி செய்யவும் பேணவும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாண்டு பாடசாலை வளாகத்தினுள் பூக்கன்றுகளையும் நிழல் தரும் மரங்களையும் நாட்டும் செயற்திட்டம் தேர்ந்து எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சமூகம், பழைய மாணவர் சங்கம் என்பன காத்திரமான பங்களிப்பை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயல் திட்டத்திற்கான பூமரங்களும் நிழல்தரு மரங்களும் SDMG (School Development Maintenance Grant) நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டது. பூமரங்களை நடுவதற்கான பாத்திகளை அகழ்வதற்கு கல்லூரியின் பழைய மாணவர் திரு.சி.நேசேந்திரம் அவர்களின் பக்கோ இயந்திரத்தின் உதவி வழங்கப்பட்டது. கடினமான வேலைகளை செய்வதற்கும் பசளைமண் கொள்வனவிற்கும் பழைய மாணவர் சங்கநிதி பயன்படுத்தப்பட்டது.
க.பொ.த. (உ.த) மாணவர் செயற்திட்டத்தில் ஒரு முறை மாத்திரம் ஒரு செயற்திட்டத்தை தெரிவு செய்யலாம். மேலும் இச் செயற்திட்டத்திற்கான மூலப் பொருட்களை கொள்வதற்கான நிதியினை கல்வித் திணைக்களத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது. ஏற்கனவே கிடைக்கப் பெற்றவாறு சமூகம், பழைய மாணவர் சங்கங்கள், நலன் விரும்பிகள் உதவி கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து முழுமையாக நடைமுறைப்படுத்தலாம். தவறும் பட்சத்தில் நிதி திரும்பி போகலாம். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நன்கொடையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
125ம் ஆண்டு நிகழ்வின் போது ஊரி கிராம சேவையாளர் பிரிவு பெற்றோர்களால் 25 பூச்சாடிகளும், மாணவர்கள் அதிகமாக உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து 22ம் ஆக மொத்தம் 47 பூச்சாடிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கீழே உள்ள படங்களில் காணப்படும் ஏனைய பாடசாலை வளாகங்கள் போன்று எமது பாடசாலை வளாகமும் அபிவிருத்தி செய்யப்பட்டு இயற்கை வனப்புமிக்க சூழலில் மனமகிழ்வுடன் நிறைவான கல்வியை பெற்று எழில் மிகு எதிர்காலத்தை பெற்றிட மேலான உதவிகளை வேண்டி நிற்கின்றோம்.
நன்றி
கனடாத் தொடர்புகளுக்கு:
தலைவர்:திரு.த.அம்பிகைபாகன்(647)766-7133
செயலாளர்: திரு.கனக.சிவகுமாரன் (647)766 2522
பொருளாளர்: திரு.ஆ.சோதிநாதன் (647)838 9323
காரைநகர் தொடர்பகளுக்கு:
செயலாளர்: திரு.இ.திருப்புகழுர்சிங்கம், தொலைபேசி இல. 077-5128962
திரு.எஸ்.கே.சதாசிவம் போசகர, தொலைபேசி இல.077–5411722 அல்லது
JAFFNA CENTRAL COLLEGE
JAFFNA HINDU COLLEGE
Dr.A.Thiagarajah M.M.V
No Responses to “பாடசாலை வளாகத்தை அழகுபடுத்துதல் பூமரங்கள் நிழல் தரும் மரங்கள் நாட்டல்”