தீவக வலயத்தில் எமது கல்லூரி முதலிடம்!
கடந்த ஆகஸ்ட் 2013 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஆறு மாணவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி உள்ளனர்.
காத்திருப்போர் தெரிவுப் பட்டியலில்(Waiting List) இருந்து கலாநிதி. ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.சோபிகா சிதம்பரப்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் தொல்பொருளியல் கற்கை நெறிக்குத் தெரிவாகியமையை அடுத்தே எமது பாடசாலையில் இருந்து பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே யாழ்ப்பாண, மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் நுண்கலைப் பீடங்களுக்கு ஐந்து மாணவர்கள் தெரிவாகி தீவக வலயத்தில் அதிகூடிய எண்ணிக்கையான மாணவர்கள் எமது கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியமை பற்றிய செய்தி இவ்விணையத்தளத்தில் எடுத்துவரப்பட்டிருந்தது.
பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு:
அதிகூடிய எண்ணிக்கையில் பல்கலைக் கழக அனுமதி பெற்று தீவக வலயத்தில் முதலிடம் பெற்ற சாதனை படைத்து எமது கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரிய மணிகளையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பெருமிதத்துடன் பாராட்டி வாழ்த்துகின்றது.
No Responses to “க.பொ.த உ-த 2013 பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாண மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகங்களின் கலைப்பீடங்களுக்கு ஆறு மாணவர்கள் தெரிவு!”