மரண அறிவித்தல்
கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடி
(எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர்)
தோற்றம்:-16-12-1967 மறைவு:- 10-01-2018
யாழ்ப்பாணம், காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியா நாட்டில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம் (அதிபர்) தம்பதிகளின் இளைய மகனும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மருமகனும், கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர்)அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் (ஆங்கிலத்துறை முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) பிறேமதாஸ் குமராசிறி (ஆங்கில ஆசிரியர், மானிப்பாய் மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற ரஞ்சித்குமாரசிறி (பிரான்ஸ்), திருமதி வீரமனோகரி ஸ்ராலினா (ஆசிரியர்), காலஞ்சென்ற விஜயராஜசேகரகுமாரசிறி, அருண்முகன்சாயிபாபா(ஜேர்மனி), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகரத்தினம் (பொறியியலாளர்) யோகேஸ்வரி, சாந்தி, கோபிச்சந்திரன் (ஆசிரியர்), கலிஸ்ரா(ஜேர்மனி), மணிமலர்-குணசுந்தரம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரஜனிகா-ரமேஸ்குமார், ரோனி, ஸ்ராலின் ஆகியோரின் அன்பு மாமனாரும், நோபல், ஜஸ்மினி, விஜயதர்சினி, விஜயடயானா, சயந்திகா, கரோலினா, ஸ்ராலினா, தாரகா, கெவின் ஆகியோரின் சிறியதந்தையும் அபிசேக் அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் காரைநகர் நீலிப்பந்தனையில் அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு:-
நதீரா (மனைவி) 94776073151
பிரேம்குமாரசிறி (சகோதரர், காரைநகர்) 0776112664
வீரமங்கை (சகோதரி, காரைநகர்) 0779469547
சாயிபாபா (சகோதரர், ஜேர்மனி) 4923899286949
No Responses to “மரண அறிவித்தல் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடி”